தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருத்துவ மனைகளில் சுகாதாரத் துறை அதிகாரி கள் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீ னிக்குகள், சிறிய அளவிலான மருத் துவ மையங்கள் உள்ளன. இவை அனைத்தும் பதிவு உரிமம் பெறு வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி பெறும் உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற் கான காலஅவகாசம் கடந்த மே மாதத் துடன் முடிவடைந்தது. ஆனால், 24 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். அதனால், காலஅவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை 35 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழு வதும் 5 ஆயிரம் மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சென்னையில் ஆய்வு செய்யப்பட்ட 900 மருத்துவமனை களில் 49 மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “உள் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை வசதி கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மருத்துவமனைகளில் ஆய்வுகள் செய்யப்படுகின்றன.
இன்னும் சில நாட்களில் ஆய்வு முடிக்கப்பட்டு மருத்துவமனை களுக்கு உரிமம் வழங்கப்படும். விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மருத்துவமனைகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என் றனர்.