தமிழகம்

தடை விதிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

செய்திப்பிரிவு

பிராந்திய கட்சிகளின் செல்வாக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மக்கள் ஆய்வு மைய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. எனவே இதுபோன்ற கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மையம் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 5.5 கோடி வாக்காளர் கள் இருக்கும்போது, வெறும் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்துவது யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. எனவே, இது ஒட்டுமொத்த வாக்காளர்களின் கருத்துகளை பிரதிபலிக்காது.

தமிழகத்தில் இருக்கும் மதங் கள், சாதிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்குகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் எண்ணங்களை பதிவு செய்வதைவிட, ஆய்வு மேற்கொள்பவர்களின் கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதுபோல இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT