தமிழகம்

12 நாட்டிக்கல் மைலுக்குமேல் கடலுக்குள் செல்பவர்கள் தகவல் அளிக்க வேண்டும்: மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

12 நாட்டிக்கல் மைலுக்குமேல் கடலுக்குள் செல்பவர்கள் தகவல் அளிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 11 லட்சத் துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள் ளனர். இவர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு, ஃபைபர் படகு மூலம் மீன்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் சிலர் 12 நாட்டிக்கல் மைல் தூரத்துக்குள் மீன்பிடிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானவர்கள் 12 நாட்டிக் கல் மைல் கடந்து மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.

சிலர் சில வாரங்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடிப்புப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அதிகாரிகளிடம் முறையாக தக வல் தெரிவிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், விபத்து ஏற்படும் காலகட்டங்களில் எத்தனை மீனவர்கள், யார் யார் சென்றனர் என்ற விவரங்கள் கூட தெரியாமல் மீன்வளத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். எனவே, இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண 12 நாட்டிக்கல் மைல் கடந்து கடலுக்குச் செல்வர்கள் தகவல் அளிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் என்ற விதி ஏற் கெனவே உள்ளது. இருப்பினும், மீனவர்களில் சிலர் இதைப் பின் பற்றுவதில்லை. வடகிழக்கு பருவ மழை காலங்களில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எதிர்பாராத வானிலை மாற்றத்தின் காரணமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

12 நாட்டிக்கலுக்குள் மீன் பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுலபமாக கரை திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், 12 நாட் டிக்கல் கடந்து செல்பவர்களால் கரை ஒதுங்குவது சிரமமாகும். எனவே, 12 நாட்டிக்கல் மைல் கடந்து கடலுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக தகவல் அளித்துச் செல்ல வேண்டும் என்று மீனவர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT