விருதுநகர்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி இன்று (அக்.23) ஆஜராகவில்லை.
இதனால் விசாரணை வரும் நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் பேராசிரியர் நிர்மலா தேவி.
இதே வழக்கில் ஜாமீனில் வெளிவந்த உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்ட மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜாரக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கருப்பசாமி, முருகன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நிர்மலா தேவி ஆஜாராகவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா 18.11.19 அன்று 3 பேரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். மேலும், நவ.18 முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.