மதுரை
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான சென்னை மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அவரது தந்தையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில் சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் உதித்சூர்யா ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். வெங்கடேசன் ஜாமீன் மனு தேனி நீதித்துறை நடுவர் மன்றத் தில் தள்ளுபடியானது. இதை யடுத்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
உதித்சூர்யா, வெங்கடேசன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில், வெங்கடேசன் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை. ஆள்மாறாட்டத்துக்கு உதவியவர்கள் குறித்து முழுத் தகவல்களை அவர் தெரிவிக்க வில்லை. விசாரணை முடியாத நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது, எனத் தெரிவிக்கப் பட்டது. மனுதாரர்கள் தரப்பில், சிபிசிஐடி விசாரணையின்போது கேட்கப்பட்ட அனைத்து தகவல் களையும் மனுதாரர்கள் வழங்கிய தாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு: ஆள்மாறாட்ட சம்பவத்தில் மாணவருக்கு அதிகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவரது தந்தைக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. இதனால் மாணவரின் வயது, அவர் மன அழுத்தத்தால் பாதிக் கப்பட்டிருப்பதையும், பிரச்சினை யைச் சந்தித்திருப்பதையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் தினமும் மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முன்பு காலை 10.30-க்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
டாக்டர் வெங்கடேசனை பொருத்தவரை அவருக்கு குற்றச் சாட்டில் பங்குள்ளது. அவர் மோசடியில் தொடர்புடையவர் களை போலீஸாரிடம் அடையாளம் காட்ட வேண்டும். எனவே வெங்க டேசனுக்கு ஜாமீன் வழங்க முடி யாது. மனு தள்ளுபடி செய்யப்படு கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.