தமிழகம்

கிருஷ்ணகிரி அருகே செல்பி மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்: பாம்பாறு அணையில் மூழ்கி புதுமண பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இறங்கி செல்பி எடுத்த போது, தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி புதுப்பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவின் மகள் கள் கனிஷ்கா (19), சினேகா (18), மகன் சந் தோஷ் (14). இளங்கோவின் அக்கா மகள் நிவேதாவுக்கும்(20), பர்கூரைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் பிரபு, நிவேதா, கனிஷ்கா, சினேகா, சந்தோஷ், உறவினர் யுவராணி (16) ஆகியோர் நேற்று ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு மாலை பாம்பாறு அணைக்கு வந்தனர். அணை தண்ணீரில் நின்றவாறு 6 பேரும் போனில் செல்பி எடுத்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக நிவேதா, கனிஷ்கா, சினேகா, சந்தோஷ், யுவராணி ஆகியோர் பாம்பாறு அணையில் விழுந்து தத்தளித்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு, அவர்களை காப்பாற்ற முயன்றார். யுவராணியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

போலீஸார், ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள், கனிஷ்கா, சினேகா, சந்தோஷ், புதுப்பெண் நிவேதா ஆகியோரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சகோதரிகள் கனிஷ்கா, சினேகா ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல் லூரியில் பொறியியல் படித்து வந்தனர். சந் தோஷ், ஊத்தங்கரை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விபத்து தொடர் பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT