சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில் நடை பெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 59 ஆயிரத்து 839 மாணவர் களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந் தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வருகிறது. 16-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 6 ஆயிரத்து 42மாண வர்கள் அழைக்கப்பட்டிருந் தனர். அவர்களில் 1,971 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.
கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்