விருதுநகர்
நீரில் மிதந்தியபடியே 37வகையான ஆசனங்களைச் செய்து சாதனை படைத்துள்ளார் விருதுநகரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி நவநீதாஸ்ரீ (9).
விருதுநகர் ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன்- ரேவதி ஆகியோரின் மகள் நவநீதாஸ்ரீ. விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது 4 வயது முதல் யோகாசனம் கற்று வரும் நவநீதீஸ்ரீ, நீருக்குள் நீந்தியபடி 37 வகையான ஆசனைகளை 5 நிமிடங்கள் 56 நொடிகளில் செய்து காட்டி "இந்தியா புக் ஆப் ரெக்கார்டில்" இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி நவநீதாஸ்ரீ கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக யோகா பயிற்சி பெற்று வருகிறேன். மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளேன். தண்ணீரில் மிதந்தபடி யோகாசனங்களைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதங்களாக நீச்சல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி அதோடு சேர்ந்த யோகாசனப் பயிற்சியும் பெற்றேன்.
கடந்த டிசம்பர் மாதம் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் நீரில் மிதந்தபடி 5 நிமிடங்கள் 56 நொடிகளில் த்ரிவிக்ரமாசனம், கூர்மாசனம், ரஜபாத தண்டையாசனம், விபத்த பட்சிமோத்தாசனம், வாமதேவாசனம், ஜடாதித பரிவத்தன ஆசனம், பாதகேனாசனம், தாண்டவாசனம் உள்ளிட்ட 37 வகையான ஆசனங்களை செய்துகாட்டினேன். இந்த சாதனை "இந்தியா புக் ஆப் ரெக்கார்டில்" பதிவு செய்யப்பட்டது. அதற்கான சான்றிதழ் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும், யோகாவில் மேலும் பல சாதனைகள் படைக்க தொடர்ந்து முயற்சிப்பேன் என்றார்.
அதைத்தொடர்ந்து, விருதுநகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை படைத்த மாணவி நவநீதாஸ்ரீ நீரில் மிதந்தபடி 37 வகையான ஆசனங்களைச் செய்துகாட்டி பார்வையாளர்களை அசத்தினார்.