சென்னை
முல்லை பெரியாறு, பரம்பிக் குளம்- ஆழியாறு மற்றும் நெய்யாறு பிரச்சினைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பழனிசாமி, செப்.25-ம் தேதி காலை திருவனந்தபுரம் செல்கிறார்.
முல்லை பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திய நிலையில், அதை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், பராமரிப்பு பணிக்கான அலுவலர்கள், பணியாளர்களை யும் அணையில் அனுமதிக்க மறுத்து வருகிறது.
இதுதவிர, கடந்த 1970-ம் ஆண்டு போடப்பட்ட பரம்பிக்குளம்- ஆழியாறு ஒப்பந்தம் அடுத்த 30 ஆண்டுகளில் அதாவது 2000-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண் டும். அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப் படாமல் உள்ளது. இதுதவிர நெய்யாறு விவகாரமும் இழுபறி யாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப். 21-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ கம் வந்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, ‘இரு மாநில பிரச்சினைகளை பேசி தீர்வு காண்போம்’ என்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் செல்கிறார்
இந்நிலையில், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம்-ஆழி யாறு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, செப்டம்பர் 25-ம் தேதி திருவனந்த புரம் தைக்காட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் சந்தித்து பேசுகிறார். சமீபத்தில், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டியை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகம்- கேரளா இடையிலான நதிநீர் பிரச்சினை கள் குறித்து எங்கு, எப்போது பேசலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப் படையிலேயே தற்போது பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது குறிப் பிடத்தக்கது.
இதற்காக செப்.25-ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம், திருவனந்தபுரம் செல்லும் முதல்வர் பழனிசாமி, அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார்.