தமிழகம்

அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் மோடி - சீன அதிபர் சந்திப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இந்தியா - சீனா இடையிலான வர்த்தக மாநாடு அக்டோபரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர்.

இருநாட்டு தலைவர்கள் வரு வதால், மாமல்லபுரத்தின் பல்வேறு பகுதிகளையும் பாதுகாப்பு அதிகாரி கள் ஆய்வு செய்கின்றனர்.நேற்று முக்கியப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். பிரதமர் மற்றும் சீன அதிபர் தங்கும் விடுதி, இருவரும் பார்வையிடும் பகுதிகள் தொடர்பாக வும் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தலை மைச் செயலர் கே.சண்முகம் தலைமை யில் பாதுகாப்பு தொடர்பான ஆலோச னைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரி கள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன்மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரி களும் விரைவில் மாமல்லபுரம் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT