மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை வரிசையில் மருத்துவ குணம் படைத்த கொடைக்கானல் மலைப்பூண் டுக்கு புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொடைக்கானலில், மருத்துவ குணம் நிறைந்த மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. சுற்றி யுள்ள மலைக்கிராமங்களான மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, பூண்டி, கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூண்டு விவசாயம் அதிக அளவில் உள்ளது.
பொதுவாக தமிழகத்தில் பூண்டு, காரிஃப் எனப்படும் ஜூன், ஜூலை மாதங்களிலும் ராஃபி எனப் படும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் விளைவிக்கப்படும். ஆனால் கொடைக்கானல் மலைப் பூண்டு ஆண்டுக்கு இருமுறை செப்டம்பர்- அக்டோபர் மாதங்களி லும் ஏப்ரல், மே மாதங்களிலும் அதிகமாக விளையும். 11 டிகிரி செல்சியஸ் முதல் 20 டிகிரி செல் சியஸ் வரையிலான குளிரையும் தாங்கி விளையும் பயிர் என்பதால் அதற்கேற்ற மண்வாகு, ஈரப்பதம், பருவநிலைக்கு ஈடுகொடுத்து அளவு, மணம், நிறம் போன்ற வற்றில் தனித்தன்மை பெற்று விளங்குவதால் மலைப்பூண்டு இப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய பயிர் ஆதாரமாக உள்ளது.
இந்த மலைப்பூண்டு திண்டுக் கல், வத்தலகுண்டு மற்றும் பெரிய குளம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது.
மலைப்பூண்டு ரசம் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும், உடல் ஜீரணத் துக்கும் அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. மலைப்பூண்டு லேகியம் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. இதன் மகத்துவம் குறித்து பாண் டிய மன்னர்கள் காலத்திலும் விளக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைப்பூண்டின் தனித்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் காக்க புவிசார் குறியீடு வழங்கக்கோரி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறையும் தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலும் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்து இருந்தது. அதன்பலனாக தற் போது கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத் துள்ளது.
இதுதொடர்பாக அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரும் சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞருமான ப.சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் தனிச்சிறப்புடைய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு வரு கிறது. புவிசார் குறியீடு பெறு வதில் கர்நாடகம் 42 பொருட்களு டன் முதலிடத்தையும் மகாராஷ் டிரம் 30 பொருட்களுடன் இரண் டாமிடத்தையும் அடுத்தபடியாக தமிழகம் 28 பொருட்களுடன் மூன்றா வது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்தின் மதுரை மல்லி, ஈத்தாமொழி நெட்டை தென்னை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, சிறுமலை வாழைப்பழம், விருப் பாச்சி மலை வாழைப்பழம் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் தற்போது கொடைக்கானல் மலைப்பூண்டும் சேர்ந்துள்ளது. இதன்மூலம் உலக அளவில் இனி பிரபலமடையும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது காவிரி டெல்டா சீரகச் சம்பா, சேலம் மாம்பலம், ஓசூர் ரோஜாப்பூ, பண்ருட்டி பலாப்பழம் ஆகிய விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இவை தவிர விவசாய மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் புவிசார் குறியீட்டுக்கு முறையாக மத்திய அரசிடம் பதிவு செய்தால் உலக அளவில் தனித்துவம் பெறும்’ என்றார்.