சென்னை
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நிறை வடைந்தது. கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்கள், மாண வர்கள் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்களை 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப் பட திட்டமிடப்பட்டது.
அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று நாட்கள், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 146 எம்பிபிஎஸ் இடங்கள், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா, கே.கே.நகர் இஎஸ்ஐ, தமிழக அரசு ஏற்று நடத்தும் ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 263 எம்பிபிஎஸ் இடங் கள் நிரப்பப்பட உள்ளன.
இதேபோல், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாகவுள்ள 16 பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.