காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் நேற்று வெளிர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் 8 மணி நேரம் காத்தி ருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. 22-ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடினர். வழக்கமாக வார இறுதி நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும். திங்கள்கிழமை கூட்ட நெரிசல் குறையும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் காத்தி ருந்தனர். அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். முதியோர் வரிசையிலும் அதிக கூட்டம் இருந்தது. வரும் வழியில் சில பக்தர்களுக்குக் குளிர்பானங்கள் மற்றும் நீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டன.
பொது தரிசனத்தில் அத்திவர தரை தரிசித்துவிட்டு வெளியே வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வெளிப் பகுதியில் உண்டியல் வைக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.
அத்திவரதர் இருக்கும் பகுதிக்கு முன் பகுதியில் ஓர் உண்டியல் இருந்தாலும் கூட்ட நெரிசலில் வந்து அங்கிருந்து விரைவாக வெளியேறும் மக்கள் தங்களிடம் பையில் உள்ள பணத்தை எடுத்து உண்டியலில் செலுத்த முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
16 குழுக்கள் அமைப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரைக் கடந்த 21 நாட்களில் 28 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த வைபவத்துக்கான ஏற்பாடு களை கண்காணிக்கவும் பக்தர் களின் வசதிக்காகவும் 9 துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பொன் னையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழக அசின் தலைமைச் செய லர் சண்முகம், டிபிஜி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
அதன்படி இந்த வைபவத் துக்கான ஏற்பாடுகளை கண் காணிக்க ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், தோட்டக் கலைத் துறை இயக்குநர் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் களும் ஆய்வு செய்து பல அறிவுரை களை வழங்கியுள்ளனர்.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு கோயில் இடங்களையும் நகரத்தையும் சுகாதாரமாக பரா மரிப்பது, அவர்களுக்கு வழங்க குடிநீர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றுக் காக 16 குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன.
இக்குழுவில் தேவைக்கு தகுந் தாற்போல் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் இருப்பர்.
பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. குடிநீர் வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதி முழுவதும் மற்றும் வடக்கு மாட வீதியில் குறிப்பிட்ட அளவுக்கும் நிழற்குடை அமைத் துள்ளோம்.
வரிசையில் வரும் பொதுமக்க ளுக்கு கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் நிற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க மணல் கொட்டப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தாற்போல் நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன.
வடக்கு மாட வீதி, ஆழ்வார் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக் தர்களுக்கு நீர்மோர், தேநீர், பிஸ்கட் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்திவரதர் இடமாற்றமா?
அத்திவரதர் இருக்கும் இடத்தை மாற்றுவது குறித்து செய்தியாளர் கள் கேட்டபோது, ‘‘இந்த விஷயத் தில் ஆகம விதிகளை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியுள் ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிசீலனை செய்து வருகிறார். அதுபோல் தரிசன நேரத்தை முன்கூட்டியே தொடங்க வேண் டும் என்கிற பக்தர்களின் கோரிக் கையையும் அறநிலையத் துறை பரிசீலித்து வருகிறது.
நின்ற கோலத்தில் எப்போது?
அத்திவதரர் நின்றகோலத்தில் எப்போது தரிசனம் தருவார் என்பது இன்று (செவ்வாய்க் கிழமை) தெரிவிக்கப்படும். பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்களின் வருகை குறித்து தகவல் ஏதும் இதுவரை இல்லை’’ என்றார்.
அத்திவரதரை மீண்டும் நீருக்குள் வைக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்போவதாக ஜீயர் ஒருவர் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ‘‘முதல்வரிடம் கோரிக்கை வைத்தால், ஆகம விதிப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத் துறை முதல்வரிடம் கலந்து பேசி இறுதி செய்யும். மாலை 6 மணிக்கு மேல் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக் கப்படும்’’ என்றார்.