தமிழகம்

ஹாட் லீக்ஸ்: ரெண்டு நம்பரும் அவுட்டு!

செய்திப்பிரிவு

தேசத்துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட வைகோவை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிடக் கூடாது என்று துணை ஜனாதிபதிக்கே மனு கொடுத்தார் சசிகலா புஷ்பா . அப்போதிருந்தே அவருக்கு போன் மேல் போனாம். கண்டங்கள் தாண்டி அவருக்கு போன் போட்டு புரட்சி வார்த்தைகளால் புரட்டி எடுத்துவிட்டார்களாம் வைகோவின் அபிமானிகள். இதனால், தான் பயன்படுத்தி வந்த இரண்டு செல்போன் எண்களையும் ஓரங்கட்டிவிட்டு புதிதாக ஒரு எண்ணை வாங்கிப் பயன்படுத்தி வருகிறாராம் சசிகலா புஷ்பா. இன்னொரு கொசுறு தகவல், சசிகலாவிடம் விவகாரத்துப் பெற்ற அவரது முதல் கணவர் லிங்கேஸ்வரன் சசிகலாவிடமே திரும்பி வந்துவிட்டாராம். மதிமுக தம்பிகள் சிலரின் போன் கால்களுக்கு பதில் சொல்லி சமாளித்ததே லிங்கம் தானாம்!

SCROLL FOR NEXT