அரியலூர்
அத்திவரதரை தரிசிக்கவும், ஒரு நாள் உற்சவ மூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு உடையார்பாளையம் ஜமீன்தார் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அரியலூர் மாவட் டம் உடையார்பாளையம் ஜமீன்தார் வம்சாவழியைச் சேர்ந்த ராஜ்குமார் பழனியப்பன் கூறியதாவது: 16-ம் நூற்றாண்டில் முகலாய படை யெடுப்பின்போது அவர்களிடம் போரிட்டு காஞ்சி வரதராஜ பெரு மாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில், ரங்கம் ரங்க நாதர் கோயில் ஆகிய கோயில் களின் உற்சவர் சிலைகள் மீட்கப் பட்டு உடையார்பாளையத்தில் உள்ள எங்கள் ஜமீன்தார் அரண் மனையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தன.
போர் முடிந்த பிறகு கோயில் உற்சவர் சிலைகள் அனைத்தும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று உரிய கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
கோயில் சிலைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்ததால் உடையார்பாளையம் ஜமீன்தார் குடும்பத்தினருக்கு என்று தனி உற்சவ பூஜைகள் தொடர்ந்து நடத் தவும், அவர்களுக்கென்று சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டன.
போர்க்காலத்தின்போது, சிலை கள் உடையார்பாளையம் வந் தடைந்ததால், காஞ்சிபுரம் உள் ளிட்ட பல்வேறு கோயில்களில் அங்கு பூஜை செய்ய சுவாமி சிலைகள் இல்லை. இதனால், காஞ்சிபுரத்தில் அத்தி மரத்தால் பெருமாள் சிலையைச் செய்து பூஜை செய்து வந்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு பிறகு உடை யார்பாளையம் ஜமீன்தாரிடம் இருந்து மீண்டும் உற்சவர் சிலை அங்கு சென்றதால் அத்திவரதர் சுவாமிக்கு பதிலாக வழக்கம்போல உற்சவர் சிலையை வைத்து வழி பாடு நடைபெற்று வந்தது. இதை நினைவுகூரும் வகையில்தான் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது.
எங்கள் முன்னோர்கள் காஞ்சி புரம் கோயிலில் பங்குனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பூஜை செய்துள்ளனர். இடையில் அப் பூஜை சில ஆண்டுகள் தடைப்பட் டது. தற்போது, நாங்கள் அத்தி வரதரை தரிசிக்கவும், ஒரு நாள் உற்சவ பூஜையில் கலந்து கொள்ளவும் எங்களுக்கு அனுமதி தர வேண்டி கோயில் நிர்வாகத் துக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் விண்ணப்பித்து இது வரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே, சுவாமி தரிசனம் செய்ய வும், உற்சவ பூஜையில் கலந்து கொள்ளவும் எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றனர்.