தமிழகம்

நீட் தேர்வில் விலக்கு அளித்து தமிழக அரசு அனுப்பிய  2 மசோதாக்கள் 2017-ல் திருப்பி அனுப்பப்பட்டன: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

நீட் தேர்வில் விலக்கு அளித்து தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் குடியரசுத் தலை வரால் நிராகரிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன என உயர் நீதி மன்றத்தில் மத்திய உள்துறை துணைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரி வித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட் டப்பேரவையில், தமிழ்நாடு மருத் துவம் மற்றும் பல் மருத்துவ மாண வர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

2017-18-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன்பாக இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக் கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உட்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த 2 சட்ட மசோ தாக்களையும் நிராகரித்து குடிய ரசுத் தலைவர் கடந்த 2017 செப் டம்பரில் உத்தரவிட்டதாக தெரிவிக் கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் இந்த 2 சட்ட மசோதாக்களும் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கை யாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசார ணையை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் ராஜீவ் எஸ்.வைத்யா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வில் விலக்கு அளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு அனுப் பிய 2 சட்ட மசோதாக்களும் கடந்த 2017 பிப்ரவரி 20-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்தது. பின்னர் அன்றைய தினமே இந்த மசோதாக்கள் உரிய நடவடிக்கைக்காக மத்திய உள் துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பி்ன்னர் இந்த அமைச்சகங்களில் இருந்து உரிய கருத்துருக்கள் பெற்று கடந்த 2017 செப்டம்பர் 11 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் குடியரசுத் தலைவர் கடந்த 2017 செப்.18 அன்று உத்தரவிட்டார். அன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் கடந்த 2017 செப்டம்பர் 22-ம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கான ஆவணங்களும் இத் துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT