தமிழக அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் விருது பெற அக்டோபர் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆதி திராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆதி திராவிடரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக தொண்டாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் 2016-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் விருதுகளுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை ஆதி திராவிடர் நல இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.