தமிழகம்

ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு?

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் ஊழியர்​கள், ஆசிரியர்​கள் என 12 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்றி வரு​கின்​றனர். அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான பணி ஓய்வு வயது 60 ஆக உள்​ளது.

வழக்​க​மாக ஆண்​டு​தோறும் மார்ச், ஏப்​ரல், மே மாதங்​களில் ஓய்வு பெறு​வோர் எண்​ணிக்கை அதி​கரித்து காணப்​படும். அந்த வகை​யில், கடந்த 2025 ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி 8,144 பேர் ஓய்வு பெற்​ற​தாக தகவல் வெளி​யானது. அதே​போல், இந்​தாண்டு நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் வரை ஓய்வு பெற்​ற​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதில் பெரும்​பாலும், பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்​தில் பணி​யில் சேர்ந்​தவர்​கள் இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. தமிழகத்தில் தற்​போதைய நில​வரப்​படி 5 லட்​சம் அரசு ஊழியர், ஆசிரியர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ள​தாக கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT