தமிழகம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.500 கோடியில் 1,000 ஏசி மின் பேருந்துகள்: பட்​ஜெட்​டில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: “சென்னை மாநகரப் போக்​கு​வரத்​துக் கழகத்​துக்கு ரூ.500 கோடி மதிப்​பில் 1,000 குளிர்​சாதன வசதி கொண்ட மின்​சா​ரப் பேருந்​துகள் வாங்​கப்​படும்” என்று பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் நேற்று பட்​ஜெட் தாக்​கல் செய்​தார். அதில் சென்னை மாநகர வளர்ச்​சிக்​கான திட்​டங்​கள் குறித்து கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு நிதி​யாண்​டில் சென்னை மாநகரப் போக்​கு​வரத்​துக் கழகத்​துக்​கு குளிர்​சாதன வசதி​களைக் கொண்ட 1,000 புதிய மின்​சா​ரப் பேருந்​துகள் வாங்​கப்​படும்.

பேருந்து பணிமனை​களில் மின்​சா​ரப் பேருந்​துகளுக்​கான மின்​சா​ரம் மற்​றும் இயந்​திர​வியல் சார்ந்த வசதி​களை ஏற்​படுத்​து​வதற்​காக திருத்த வரவு -செல​வுத் திட்ட மதிப்​பீடு​களில் ரூ.500 கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது.

போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு மானிய​மாக ரூ.7,675 கோடி, செயல்​திறன் இடைவெளி நிதி​யுதவி ரூ.2,650 கோடி, பங்கு மூலதன உதவி​யாக ரூ.1,005 கோடி ஒதுக்​கப்​படு​கிறது. இந்​தத் திருத்த வரவு - செல​வுத் திட்ட மதிப்​பீடு​களில் போக்​கு​வரத்​துத் துறைக்கு ரூ.13,561 கோடி ஒதுக்​கப்​படு​கிறது.

மெட்ரோ திட்​டங்​கள்: சென்னை விமான நிலை​யம் முதல் கிளாம்​பாக்​கம் வரை, ஆவடி வழி​யாக கோயம்​பேடு முதல் பட்​டாபி​ராம் வரை, ஸ்ரீபெரும்​புதூர் மார்க்​கத்​தில் பூந்​தமல்லி முதல் சுங்​கு​வார்​சத்​திரம் வரை கூடு​தல் மெட்ரோ ரயில் வழித்​தடத் திட்​டங்​களுக்கு மத்​திய அரசு விரை​வான ஒப்​புதல் வழங்​கு​வதற்​குத் தேவை​யான அனைத்து நடவடிக்​கை​களும் துறை​யால் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூரில் இருந்து கர்​நாடக மாநிலம் பொம்​மசந்​திரா வரை மெட்ரோ ரயில் திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு மத்​திய, கர்​நாடக அரசுகளு​டன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

ஒருங்​கிணைந்த சாலைக் கட்​டமைப்பு மேம்​பாட்​டுத் திட்​டத்​தின் கீழ் ரூ.9,300 கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது. இத்​திட்​டத்​தின் கீழ் மாநில நெடுஞ்​சாலை​களை 4 வழிச் சாலை​களாக அகலப்​படுத்​துதல், புறவழிச் சாலை​கள் அமைத்​தல் உட்பட பல அம்சங்கள் அடங்​கும்.

சாலைப் பாது​காப்பை உறுதி செய்ய, பாது​காப்​பான சாலை​கள் இயக்​கம் அறி​முகப்​படுத்​தப்​படும். சாலை​கள் வடிவ​மைப்​பு, கட்​டு​மானம், பரா​மரிப்பு ஆகிய​வற்​றில் தனி கவனம் செலுத்​தக் கூடிய இந்த இயக்​கத்​தில், செயற்கை நுண்​ணறி​வின் மூலம் வேகக் கட்​டுப்​பாடு விதி​மீறல்​களைக் கண்​காணித்​தல், சாலை ரோந்​துப் பிரிவு மற்​றும் தீவிர காயங்​களுக்​கான சிகிச்சை மையங்​கள் அமைத்​தல் ஆகியவை அடங்​கும்.

தமி​ழ​கத்​தில் பல சாலை​கள் போதிய பரா​மரிப்​பின்றி குண்​டும் குழி​யு​மாக இருப்​ப​தால் பயணிப்​பது சவாலாகவே உள்​ளது. இச்​சாலை​களைச் சரி செய்ய திருத்த வரவு - செல​வுத் திட்ட மதிப்​பீடு​களில் ரூ.250 கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது. சாலை​களில் குறை​கள் இருக்​கும் பட்​சத்​தில் பொது​மக்​கள் ‘நம்ம சாலை செயலி’​யின் மூலம் உடனுக்​குடன் புகைப்​படம் எடுத்து தகவல் தெரிவிக்​கலாம். இக்​குறை​கள் துரித​மாக சீர்​செய்​யப்​படும்.

காவலர் குடி​யிருப்பு: ஐந்து ஆயிரம் காவலர் குடும்​பங்​கள் பயனடை​யும் வகை​யில் போலீஸ் குடி​யிருப்பு வளாகங்​கள் கட்ட ரூ.431 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் விபத்து நிவாரண நிதித் திட்​டத்​துக்​காக 2026-27-ம் ஆண்​டுக்​கான திருத்த வரவு - செல​வுத் திட்ட மதிப்​பீடு​களில் ரூ.200 கோடி ஒதுக்​கப்​படு​கிறது. மேலும், 2026-27-ம் நிதி​யாண்​டில் பல்​வேறு சாலைப் பாது​காப்​புக்​கான பணி​களை மேற்​கொள்​வதற்​காகச் சாலைப் பாது​காப்பு நிதி​யின் கீழ் ரூ.130 கோடி ஒதுக்​கப்​படு​கிறது.

சட்​டம் - ஒழுங்கை சிறப்​பாகப் பரா​மரிக்க, குற்​றங்​களைக் கட்​டுப்​படுத்​த, காவல் துறை​யினருக்கு போது​மான குடி​யிருப்பு வசதி​கள் இன்​றியமை​யாதவை ஆகும். இந்த நோக்​கில், மாவட்​டங்​களில் காவல் துறை​யினருக்​கான குடி​யிருப்பு வளாகங்​களைக் கட்​டு​வதற்​காக ரூ.431 கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது.

இத்​திட்​டத்​தின் மூலம் மொத்​தம் 5,000 காவலர் குடும்​பங்​கள் பயனடை​யும். இந்த திருத்த வரவு - செல​வுத் திட்ட மதிப்​பீடு​களில் உள்​துறை, மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு தமிழக பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT