தமிழகம்

49-வது சென்னை புத்தக காட்சி இன்றுடன் நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தி்ல் நடை​பெற்று வரும் 49-வது சென்னை புத்தக காட்சி இன்று முடிவடைகிறது. தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர் மற்​றும் பதிப்​பாளர் சங்​கம் (பபாசி) சார்​பில், 49-வது சென்னை புத்தக காட்சி ஜன.8-ம் தேதி தொடங்​கியது.

ஆயிரம் அரங்​கு​களு​டன் கூடிய இந்த புத்தக காட்​சியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார். அதோடு கலைஞர் பொற்​கிழி விருதுகளை​யும் அவர் வழங்​கி​னார்.

          

தின​மும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக காட்சி நடை​பெற்று வரு​கிறது. அனை​வருக்​கும் அனு​மதி இலவசம். தின​மும் நூல் வெளி​யீடு​கள், இலக்​கிய அமர்​வு​கள், கலைநிகழ்ச்​சிகள் என பல்​வேறு சிறப்பு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன.

புத்தக காட்​சிக்கு வரும் பார்​வை​யாளர்​கள் புத்தக காட்​சியை பார்​வை​யிட்டு தங்​களுக்கு பிடித்​த​மான புத்​தகங்​களை வாங்​கிச் செல்​கிறார்​கள். கண்​காட்​சி​யில் வாங்​கப்​படும் அனைத்து புத்​தகங்​களுக்​கும் சிறப்பு தள்​ளு​படி சலுகை​யும் வழங்​கப்​படு​கிறது.

உச்​சநீ​தி​மன்ற நீதிபதி பங்கேற்பு: இந்​நிலை​யில், கடந்த 13 நாட்​களாக நடை​பெற்று வரும் சென்னை புத்தக காட்சி இன்​றுடன் (21-ம் தேதி) முடிவடைகிறது.

மாலை 6 மணி​யள​வில் நடை​பெறும் நிறைவு விழா​வில், உச்​சநீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொள்​கிறார். அவர் பதிப்​புத் துறை​யில் 25 ஆண்​டு​கள் நிறைவு செய்த பணி​யாளர்​களுக்​கு விருது வழங்கி கவுரவிக்​கிறார்​.

SCROLL FOR NEXT