தமிழகம்

10 நாளில் 35,858 பேருக்கு பொறியியல் ஒதுக்கீட்டு ஆணை

செய்திப்பிரிவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் கடந்த 10 நாட்களில் 35,858 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. 10-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 4,309 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 1,082 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியை தேர்வுசெய்த 3,218 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் 35,858 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். 10 நாட்களும் சேர்த்து ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை 10,193 என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT