பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் விலை உயர்ந்துள்ளதால், ஆட் டோக்களில் மீண்டும் பேரம் பேசி குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இத னால், பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.
சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த 2013 ஆகஸ்ட் 25-ம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித் தார். அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஆட்டோ கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்தது.
ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்ப வசதி யுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் 2014 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வழங்கப்படும்; எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் முத்தரப்பு கமிட்டி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவை செய் யப்படவில்லை.
பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் விலை உயர்வினால் ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்ய தொடங்கி யுள்ளனர். அவ்வப்போது, போக்கு வரத்து ஆணையரக அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை பணிகளும் தற்போது அவ்வளவாக நடக்காத தால், ஆட்டோ ஓட்டுநர்கள் எந்த தயக்கமும் இன்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இத னால், மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்டோ தொழி லாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செயலாளர் சேஷ சயனம் கூறும்போது, ‘‘ஆட்டோ வுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும்போது பெட்ரோல், டீசல் விலை வேறு, தற்போதுள்ள விலை நிலவரம் வேறு. அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோவை ஓட்ட முடியவில்லை. உதிரி பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஆட்டோ கட்டணம் நிர்ணயத்தின்போது லிட்டர் ரூ.150 ஆக இருந்த ஆயில், தற்போது ரூ.250-க்கு விற்கப்படுகிறது. இதனால், மீட்டர் போட்டு ஓட்டிக் கொண்டிருந்த 75 சதவீத தொழிலாளர்கள் வேறுவழியின்றி மீண்டும் பேரம் பேசி கட்டணம் வசூலிக்கின்றனர். முத்தரப்பு கமிட்டி அமைத்து கட்டணத்தை மாற்றி அமைத்தால்தான் மக் களுக்கும், ஆட்டோ ஓட்டு நர்களுக்கும் பாதிப்பின்றி ஆட்டோ தொழிலை நடத்த முடியும்’’ என்றார்.