தமிழகம்

சென்னையில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. சமீபத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் இத்​தொகு​தி​களில் 419 பேர் போட்​டி​யிட்​டனர். சுமார் 4,085 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டன.

மொத்​தம் 28.93 லட்​சம் பேர் வாக்​களிக்க இருந்த நிலை​யில் மொத்​தம் 24,22,097 (83.71 சதவீதம்) பேர் வாக்​களித்​தனர். கடந்த 2016 தேர்​தலில் 60 சதவீதம், 2021 தேர்​தலில் 59 சதவீதம் வாக்​கு​கள் பதி​வான நிலை​யில், இப்​போது 83 சதவீதம் பதி​வாகி சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

ஆண்​களில் 84.05 சதவீதம் பேரும் (11.73 லட்​சம்), பெண்​களில் 83.40 சதவீதம் பேரும் (12.48 லட்​சம்), மூன்​றாம் பாலினத்​தவரில் 58.53 சதவீதம் (508 பேர்) பேரும் வாக்​களித்​துள்​ளனர். அதே நேரத்​தில் 4.71 லட்​சம் பேர் இந்த தேர்​தலில் வாக்​களிக்​க​வில்​லை.

திரு​மணம் உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளுக்கு வெளியூர் சென்​றது, சென்னை திரும்ப போதிய போக்​கு​வரத்து வசதி இல்​லாதது, எஸ்​ஐஆர் பணி​களுக்கு பிறகு, மாவட்​டத்தை விட்டு நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​தது, சமையல் காஸ், ஆட்டோ காஸ், சிஎன்ஜி தட்​டுப்​பாட்​டால், வேலை இல்​லாத நிலை​யில், சென்​னை​யில் வாக்​காள​ராக இருப்​பவர்​கள் சொந்த ஊர்​களுக்கு புறப்​பட்​டுச் சென்​றது, உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள், விபத்​தால் நடக்க முடி​யாமல் போனவர்​கள், மருத்​துவ சிகிச்​சை​யில் இருப்​பவர்​கள் போன்ற காரணங்​களால் அவர்​களால் வாக்​களிக்க முடிய​வில்லை என்று கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT