தமிழகம்

மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த தாய்

செய்திப்பிரிவு

சிறுநீரகங்கள் செயலிழந்த மக னுக்கு, தாய் தன்னுடைய ஒரு சிறு நீரகத்தை தானமாக கொடுத்தார்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தினேஷ் (23). தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதி யாக வேலை பார்க்கிறார். உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் 6 மாதத்துக்கு முன்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது 2 சிறு நீரகங்களும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் அவருக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவரது தாய் தனது 2 சிறுநீரகங்களில் ஒன்றை மகனுக்கு தானமாகக் கொடுக்க முன்வந்தார். இதையடுத்து, மருத் துவமனை டீன் டாக்டர் நாராயண பாபு உத்தரவின்படி சிறுநீரகத் துறைத் தலைவர் டாக்டர் வி.பல ராமன், டாக்டர் முத்துலதா தலைமை யிலான குழுவினர் கடந்த மாதம் 7-ம் தேதி இதற்கான அறுவை சிகிச் சையை மேற்கொண்டனர். தாயின் ஒரு சிறுநீரகத்தை அகற்றி, தினே ஷுக்கு வெற்றிகரமாகப் பொருத்தினர். நோயாளிக்கு ஸ்டீராய்டு மருந்து செலுத் தாமல், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT