ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் பகுதியில் ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் பத்மா உள்ளிட்ட வனக்காவலர்கள் கொண்ட குழு ரோந்து பணியில் ஈடுபட்டது.
சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே புலி நகங்களை கடத்த முயன்ற 3 பேரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆசனூர் மாதேவன் (47), கெத்தேசாலை மகாதேவன் (25), சித்தன் (27) என்பது தெரியவந்தது. 8 புலி நகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேரும் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.