தமிழகம்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு தாக்கல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி வேளாண் அதிகாரி எஸ். முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண் டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த 4 ம் தேதி கைது செய்து பாளையங் கோட்டை சிறையில் அடைத்தனர்.

ஜாமீன் கேட்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில் செந்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நசீர் அகமது சமீபத்தில் தள்ளுபடி செய்திருந் தார். இந்நிலையில், அக்ரி கிருஷ்ண மூர்த்தி தரப்பில் நேற்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட் டது. இந்த மனு மீதான விசா ரணை நாளை நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT