தமிழகம்

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 4 அடி ஆழத்துக்கு பள்ளம்

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை​யில் சுமார் 4 அடி ஆழம், 20 அடி நீளத்​துக்கு திடீரென பள்​ளம் ஏற்​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. முக்​கிய சாலை​யில் ஏற்​பட்ட இந்த பள்​ளத்​தால் வாகன ஓட்​டிகள் அச்​சத்​துடன் வாக​னங்​களை ஓட்​டிச் சென்​றனர்.

மயி​லாப்​பூர் பகு​தியில் இருந்து டாக்​டர் ராதாகிருஷ்ணன் சாலை வழி​யாக தின​மும் ஏராள​மான கார்​கள், இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் மாநகர பஸ்​கள் சென்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை சாலை​யின் ஒரு பகு​தி​யில் திடீரென மண் உள்​வாங்கி 4 அடி ஆழம், 20 அடி நீளத்​துக்கு பள்​ளம் ஏற்​பட்​டது. பள்​ளம் பெரி​தாக இருந்​த​தால் அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​களுக்கு விபத்து ஏற்​படும் அபா​யம் ஏற்​பட்​டது.

இதுபற்றி தகவல் அறிந்த மயி​லாப்​பூர் போக்​கு​வரத்து போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தனர். வாகன ஓட்​டிகள் பள்​ளத்​தில் விழுந்​து​வி​டா​மல் இருக்க பள்​ளத்தை சுற்​றி​லும் இரும்பு தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டது.

மேலும், அந்​தப் பகு​தி​யில் போக்​கு​வரத்​தை​யும் ஒழுங்​குபடுத்​தினர். இதைத்​தொடர்ந்து பள்​ளத்தை சீரமைக்​கும் பணி​கள் உடனடி​யாக தொடங்​கப்​பட்​டன. கான்​கிரீட் கலவை கொண்டு பள்​ளத்தை நிரப்பி சாலையை சீரமைக்​கும் பணி​யில் ஊழியர்​கள் ஈடு​பட்​டனர்.

முக்​கிய சாலை​யில் திடீரென ஏற்​பட்ட இந்த பள்​ளத்​துக்கு காரணம் என்ன என்​பது குறித்து சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

மெட்ரோ பணி, மழைநீர் செல்​லும் குழா​யில் ஏற்​பட்ட பாதிப்பு அல்​லது மண்​ணின் தன்மை காரண​மாக சாலை உள்​வாங்​கிய​தா? என்பன உள்பட பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

சாலையை முழு​மை​யாக சீரமைத்​து, மீண்​டும் இது​போன்ற பள்​ளம் ஏற்​ப​டாத வகை​யில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT