தமிழகம்

இலங்கை கடற்படையால் 1000 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

செய்திப்பிரிவு

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 288 விசைப்படகுகளில் மீன்பிடிக்க நேற்று கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் குறைந்த அளவிலேயே கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT