அரசு மாணவர் விடுதிகளில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 1657 தலித் மற்றும் பழங்குடியினர் நல அரசு விடுதிகளும், 1305 பிற் படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளும் உள்ளன. இவ்விடுதி களில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், சுகாதாரமும் போதுமானதாக இல்லை.
விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற தாக உள்ளது. இவ்விடுதிகளில் ஒரு நாள் உணவுக்கு பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.24.35ம், கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.28.22ம் செலவிடப்படுகிறது. இது மிகவும் குறைவான தொகையாகும்.
அரசு விடுதி மாணவர்கள் பிரச்சினைகளில் அரசு உடனடி யாக தலையிட்டு, விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும். உணவுக்கான ஒதுக்கீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் அரசாணை எண்.92-ஐ அமல்படுத்த வேண் டும். இக்கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட பன்மடங்கு கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.