தமிழகம்

பொங்கல்: சென்னை திரும்ப வசதியாக சனிக்கிழமை 3,500+ சிறப்பு பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்​டிகைக்​காக சொந்த ஊர் சென்​றவர்​கள் சென்னை திரும்ப வசதியாக நாளை (ஜன.17) 3,507 சிறப்பு பேருந்​துகள் இயக்கப்படவுள்ளதாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்​னை​யில் வசிக்​கும் வெளி​மாவட்ட மக்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றனர். பேருந்​துகள், ரயில்​கள், விமானம், சொந்த வாக​னங்​கள் மூலம் 18 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் சொந்த ஊர் சென்​றனர். தமிழக அரசு போக்​கு​வரத்து துறை சார்​பில் கடந்த 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 6 நாட்​களில் 21,282 பேருந்​துகள் இயக்​கப்​பட்டன. இவற்றில் 9.80 லட்​சம் பேர் பயணம் செய்​தனர்.

இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்​கள் சென்னை திரும்ப வசதி​யாக இன்று முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்றன. பொங்கல் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கிறது, பெரும்பாலானார் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு பின் ஊர் திரும்பவும், ஒரு சிலர் கூட்டத்தை தவிர்க்க சனிக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடங்களை முடித்து கொண்டு ஊர் திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்று மாட்டுப்பொங்கல் என்பதால் குறைந்த அளவிலான பயணிகளே ஊர் திரும்ப திட்டமிட்டனர். இதன் காரணமாக இன்று பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 775 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அரசு அலு​வலக பணி​யாளர்​கள், பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சென்னை திரும்ப திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இதற்காக சனிக்கிழமை வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக 1,415 பேருந்​துகள் என மொத்தம் 3,507 பேருந்துகள் இயக்​கப்பட உள்​ளன. அதே​போல சென்​னையைத் தவிர மற்ற நகரங்​களுக்கு 2,060 பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ஞாயிற்றுக்கிழமை சென்​னைக்கு கூடு​தலாக 3,100 பேருந்​துகளும், மற்ற நகரங்​களுக்கு 4,080 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT