தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவர். (உள்படம்) கொலையான மதபோதகர் கனகராஜ்.

 
தமிழகம்

சென்னை மதபோதகர் கொலையில் சபை ஊழியர்கள் 3 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: சென்​னையைச் சேர்ந்த மதபோதகர் கொலை வழக்​கில், அதே சபை ஊழியர்​கள் 3 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தூத்​துக்​குடி இரண்​டாவது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

தூத்​துக்​குடி மில்​லர்​புரம் பகு​தி​யில் செயல்​பட்டு வரும் பெந்​தகோஸ்தே சபை​யின் தலைமை மதபோதக​ராக, சென்னை பெரம்​பூர் மங்​களபுரம் கிருஷ்ண​தாஸ் சாலை​யைச் சேர்ந்த ஆர்​.க​னக​ராஜ் (74). என்​பவர், 1960-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்​தார். சபை ஊழியர்​கள் தங்​கும் இடத்​தில் உள்ள கட்​டிடத்​தின் மேல் மாடி​யில் கூரை அமைத்து தங்​கி​யிருந்​தார். திரு​மணம் செய்து கொள்​ள​வில்​லை.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்​டோபர் 5-ம் தேதி காலை​யில் படுக்​கை​யில் மர்​ம​மான முறை​யில் இறந்து கிடந்​தார். அவர் மாரடைப்​பால் இறந்​த​தாக, உடலை அடக்​கம் செய்ய சிலர் முயற்​சித்​தனர். ஆனால், அவரது முகத்​தில் காயங்​கள் இருந்​த​தால், அவரது உடலை கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்​துக்​குடி சிப்​காட் போலீ​ஸார் அனுப்பி வைத்​தனர்.

கழுத்தை நெரித்​தும், தலை​யணை​யால் முகத்தை அழுத்​தி​யும் கனக​ராஜ் கொலை செய்​யப்​பட்​டது பிரேத பரிசோதனை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் இந்த வழக்கை கொலை வழக்​காக மாற்றி விசா​ரணை நடத்​தினர். சபை​யில் ஒழுக்​கம் மற்​றும் வரவு செல​வில் கனக​ராஜ் நேர்​மை​யாக இருந்​ததும், இதனால் ஏற்​பட்ட முன்​விரோதம் காரண​மாக கனக​ராஜ் கொலை செய்​யப்​பட்​டதும் ஓராண்டு கழித்து தெரிய​வந்​தது.

இதே சபை​யின் ஊழிய​ரான கன்​னி​யாகுமரி வெட்​டூர்​ணிமடத்தை சேர்ந்த டைட்​டஸ், அவரது சகோ​தரர் அண்டோ, கோட்​டாறைச் சேர்ந்த ரகு, உதவி மதபோதகர் பணி​யாற்​றிய குல​வணி​கர்​புரத்தைச் சேர்ந்த ரா.ஜான்​தாமஸ் ஆகிய 4 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

தூத்​துக்​குடி மாவட்ட இரண்​டாவது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு விசா​ரணை நடை​பெற்று வந்​தது. விசா ரணைக் காலத்​தில் உதவி மதபோதகர் ஜான்​தாமஸ் இறந்​து​ விட்​டார். இதையடுத்து குற்றம்​சாட்​டப்​பட்ட டைட்​டஸ், அண்​டோ, ரகு ஆகிய 3 பேருக்​கும் ஆயுள் தண்​டனை​யும், டைட்​டஸுக்கு ரூ.13,500, அண்​டோவுக்கு ரூ.6 ஆயிரம், ரகு​வுக்கு ரூ.5 ஆயிரம் அபராத​மும் விதித்​து, நீதிபதி எம்​.பிரீத்தா நேற்று தீர்ப்​பளித்​தார். இந்த வழக்​கில் அரசு வழக்​கறிஞர் சேவியர் ஞானப்​பிர​காசம் ஆஜரானார்.

SCROLL FOR NEXT