கோவை மாவட்டம் அன்னூர் உள்பட மூன்று ஊர்களில் விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.