இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை அதிபரின் செய்தித் தொடர்பாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்றுள்ளார். அவரை பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் சிறிசேனா பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளார். இலங்கை அதிபரின் இந்திய வருகையை ஒட்டி விரைவில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 87 படகுகளும் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்கால் மீனவர்கள் 15 பேரின் விடுதலைக்கான உத்தரவு திங்கள்கிழமை இலங்கை அரசால் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.