ஈஸ்டர் பண்டிகை இன்று உற்சாக மாக கொண்டாடப் படுகிறது. இப் இதை முன்னிட்டு சென்னையில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்துகொண்டனர்.
புனித வெள்ளி அனுசரிப்பு
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி கடந்த வெள்ளிக் கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப்பாதை, திருச் சிலுவை வழிபாடு நடந்தது. பரங்கி மலை புனித தோமையார் ஆலயத் தில் நடந்த சிலுவைப்பாதையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அருட்தந்தை பாக்யரெஜிஸ் தலைமையில் திருச்சிலுவை ஆராதனை நடந்தது. அதன்பிறகு இயேசுவின் பாடுபட்ட சொரூபம் ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் 7 வாசகங்களை மையப்படுத்தி அருட்தந்தை ஜெயசீலன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாதிரியார் நளினத்துடன் பரதநாட்டியம் ஆடிய காட்சியை அனைவரும் பார்த்து வியந்தனர்.
ஈஸ்டர் பண்டிகை
இயேசு உயிர்நீத்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. அவரது உயிர்ப்புநாளை கிறிஸ் தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில், ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது. சாந்தோம் பேராலயத்தில் நள்ளி ரவு 11 மணிக்கு ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை யில் ஈஸ்டர் ஆராதனை நடைபெற் றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர் கள் கலந்துகொண்டு ஈஸ்டர் வாழ்த் துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நள்ளிரவு சிறப்பு திருப்பலி
பெசன்ட் நகர் அன்னை வேளாங் கண்ணி ஆலயம், மயிலாப்பூர் பிர காச மாதா ஆலயம், நுங்கம்பாக் கம் புனித தெரசா ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் உள் ளிட்ட தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடந்தது.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் ஈஸ்டர் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற் றன. மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயத் தில் அருட்தந்தை சி.பால்ராஜ் தலைமையில் நள்ளிரவு 11.30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந் தது. இதில் ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்துகொண்டனர்.
தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், குரோம்பேட்டை அமலோற்பவ அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்லாயன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் ஈஸ்டர் சிறப்பு ஆராதனை நடந்தது.