தமிழகம்

மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

செய்திப்பிரிவு

கச்சத்தீவு அருகே இலங்கை கடற் படையினர் மண்டபம் மீனவர்களை நேற்று அதிகாலை தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர்.

மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன் கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வியாழக் கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டி ருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படை யினர் சிறிய கப்பல்களில் ரோந்து வந்தனர். மண்டபம் மீனவர்களிடம், இது இலங்கை கடற்பகுதி. இங்கு மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஐந்து விசைப்படகுகளில் இருந்த மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் வீசினர். அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைக் கொட்டினர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பினர். மேலும் சில மீனவர்கள் வழக்கத்துக்கு மாறான இடங்களில் வலை விரித்து போதிய மீன் கிடைக்காமல் வெறும் கையுடன் கரை திரும்பியுள்ளனர்.

இத்தகவலை மீனவர்கள் செய்தி யாளர்களிடம் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT