சென்னை டிரேட் சென்டரில் 'புத்தாண்டு ஷாப்பிங் திருவிழா-2014' என்ற 3 நாள் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றும் நாளையும் (டிச. 20, 21) காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபர்னீச்சர், உள் அலங் காரப் பொருட்கள், கலைப் பொருட்கள், உயர்தர துணி வகைகள், திரைச் சீலைகள், சமையலறை சாதனங்கள், அலங்கார விளக்குகள், செயற்கை பூக்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் கிடைக்கும். புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி உண்டு.
“மக்களில் பெரும்பாலானோர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை தோன்றும் போதெல் லாம்வாங்குவதில்லை. பண்டிகைக் காலங்களில் சலுகைத் திட்டங்களை பயன்படுத்தி வாங்குகின்றனர். இந்த கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சிறப்பு தள்ளுபடியுடன் பக்கத்து பக்கத்து அரங்குகளில் கிடைப்ப தால் பொதுமக்கள் பல்வேறு கடைகளில் ஏறி இறங்கி தேர்வு செய்யும் சிரமம் இருக்காது” என்று இக்கண்காட்சியின் ஒருங்கிணைப் பாளர் இ.உதயகுமார் கூறினார்.