தமிழகம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இனி காலணிகளுக்கு பதில் ஷூ: தமிழக அரசு முடிவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு பள்ளி  மாணவ, மாணவியருக்கு காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணயவிருக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017- 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் முதலே வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT