உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களில் 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மருத்துவக் கல்லூரியில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் (டி.எம்., எம்.சிஎச்.) அரசு டாக்டர்களுக்கு இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப வழங்க வலியுறுத்தி அரசு மருத் துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஏ.ராமலிங்கம் தலைமையில் நடந்த போராட்டத்தில் அரசு டாக் டர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக டாக்டர் ஏ.ராம லிங்கம் கூறுகையில், “தமிழகத்தில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களில் 192 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மத்திய அரசு கலந்தாய்வு நடத்த உள்ளது. இதனால் அரசு டாக்டர்களுக்கு இருந்த 50 சதவீத இடஒதுக்கீடு பறிபோகும் நிலை உருவாகும். அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தமிழக அரசு நீதிமன்றம் செல்ல வேண்டும். சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட்-எஸ்எஸ் தேர்வு முடிவுகள் வரும் 15-ம் தேதி வெளியாகிறது. அதற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.