கேரள மாநிலம், மூணாறு அருகே ராட்சத மரம் விழுந்து 3 பெண் தொழி லாளர்கள் பலியாகினர்.
இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே குஞ்சு தண்ணி நெல்லிக்காடு என்ற இடத்தில் ஜான்சன் என்பவரது ஏலத் தோட்டத் தில், அதே பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் நேற்று வேலை செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது, சாரல் மழையுடன் பலத்த காற்று வீசியதில் அருகில் இருந்த பெரிய மரம் சாய்ந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில் புஷ்பா(36), மெர்சி(36), பாண்டியம்மாள்(40) ஆகிய 3 பெண் தொழி லாளர்கள் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந் தனர்.
காயமடைந்தவர்கள் அடிமாலி அரசு மருத்து வமனையில் சேர்க் கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் தொடர் பாக வெள்ளத்தூவல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.