கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீன வர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்திய இலங்கை கடற் படையினர், அங்கு மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து விரட்டி யடித்தனர். மேலும், புதுக்கோட் டையைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து நேற்று முன் தினம் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட படகுகளின் மீனவர்கள், நேற்று அதிகாலையில் கச்சத்தீவு அருகே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்துப் படகுக ளில் வந்த இலங்கை கடற் படையினர் மீனவர்களின் படகு களில் இருந்த மீன்களை கடலில் கொட்டினர். வலைகளை வெட்டி எறிந்தனர். இலங்கை கடற்பகுதி யில் மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து விரட்டி அடித்தனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கரை திரும்பினர்.
மீனவர்களுக்கு சிறை
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 220 விசைப்படகுகளில் மீனவர் கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற னர். அதில், ஒரு படகில் சி.சந்தான குமார், சி.வெற்றி, ஆர்.முகேஷ், எம்.நாகராஜ் ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துள்ளனர். அப்போது, எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, 4 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர் களது விசைப்படகையும் பறி முதல் செய்தனர்.
அவர்கள் 4 பேரும் யாழ்ப்பாண மீன்வள அதிகாரிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் நேற்று மதியம் ஊர்க் காவல் துறை நீதிமன்றத்தில் 4 மீனவர்களும் ஆஜர்படுத் தப்பட்டனர். அவர்களை ஜுலை 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.