எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில், திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரெங்கநாத பெருமாள் ஆலய அன்னதான கூடத்தில், கடந்த 17-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகி கள் வெங்கடேச பெருமாள், செல்வகுமார், பாபு, ஹயாத், நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் நாகராஜன், ராமச்சந்திரன், திருப் பூர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மலரவன், மதுரை மா.சோ.நாராய ணன், சரவணன், தாராபுரம் குருநா தன் முதலானோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஒத்துழைத்த டைமண்ட் திருப்பதி, முத்துகிருஷ்ணன், சிந்தாமணி கிருஷ்ணன், ஆட்டோ சரவணன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலும் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் விழாவில், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர் தாஸ் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. விழாவில் ஏழுமலை மற்றும் சங்க துணைத்தலைவர் எஸ்.எம்.மனோ கரன், வி. ஆர். செல்வகுமார், சர வணன், கணபதி, மற்றும் உறுப் பினர்கள் சுரேந்திர பாபு, வெங்க டேசன், ரவிசங்கர், கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.