தமிழகம்

ஒலிம்பிக் போட்டியில் எனக்கு எவ்வித ஆதரவும் இல்லை: கோவையில் மத்திய அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர் வருத்தம்

செய்திப்பிரிவு

நான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை என கோவையில் நடைபெற்ற ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.

ஈஷா ஊரக புத்தாக்கத் திட் டத்தின்கீழ் கிராமோத்சவம் என்ற பெயரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிராமப்புற மக்களிடத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில் கைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு, 12-வது ஆண்டாக, நடப்பு ஆண்டில், கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் 880 கிராமங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 10,360 பேர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வான குழுக்களுக்கு இறுதிச் சுற்று போட்டிகள், கோவை கொடீசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றன.

ஈஷாவின் கிராமோத்சவம் நிறைவு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசுகள் வழங்கினர்.

விழாவில், மத்திய அமைச்சர் பேசியதாவது:

குழுவாக சேர்ந்து விளையாடும் போது, ஒருவருக்கு ஒருவர் ஊக்கப் படுத்திக் கொள்வதன் மூலம் நட்பு வளரும். கிராமப்புற மக்களிடையே விளையாட்டை ஊக்குவிக்க வேண் டும். நான் கிராமப்புறத்தில் இருந்து வந்து விளையாட்டில் பங்கேற்ற வன். நான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றபோது, எவ்வித ஆதரவும் கிடைக்கவில்லை. பயிற்சியாளர் கள்கூட கிடையாது.

எனது திறமையை நம்பியே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். ஆனால், வெற்றிக்கு பின்னர் எனக்கு பல தரப்பில் இருந் தும் ஆதரவு கிடைத்தது. அவ்வாறு ஆதரவு கிடைக்கத் தொடங்கியவு டன் போட்டிகளில் தோல்வி அடையத் தொடங்கினேன். எவ்வித ஆதரவும் இல்லாமல் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றி.

விளையாட்டில் பயிற்சியாளரால் வெற்றிக்கான பாதையைத்தான் காட்ட முடியும். போட்டியில் வெற்றி பெறுபவனை மட்டுமே உண்மையான விளையாட்டு வீரன் என கருத முடியாது. திறன் குறைவாக இருந்தும் வெற்றிக்காக இறுதிவரை போராடி தோல்வியை அடைபவனே சிறந்த விளையாட்டு வீரன் என்றார்.

உடல் தகுதி பெறும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசும்போது, “விளையாட்டு மூலம் மட்டுமே உடல் தகுதியை பெற முடியும். விளையாட்டில் பங்கேற்று வெற்றி, தோல்வி காண்பது மட்டுமே இலக்கு அல்ல. அதற்காக தயாராவதுகூட ஒரு திறன்தான். விளையாட்டு என்பது ஒரு சிறந்த கற்றல்முறை. நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டு” என்றார்

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது: விளையாட்டு என்பது விதிகளுக்கு உட்பட்டது. அந்த விதிகளை மீறுவது என்பது விளை யாட்டுக்கு எதிராகச் செயல்படுவ தாகும். இதேபோல்தான், நாட்டில் சட்ட திட்டங்களை மீறி செயல்படு வது தேசத்துக்கு எதிரான செயல்.

எந்த ஒரு பணியையும் அரை மனதுடன் செய்ய முடியும். ஆனால், விளையாட்டை அரை மனதோடு மேற்கொள்ள முடியாது. விளை யாட்டு மூலம் வாழ்க்கையை நாம் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள முடியும்.

நமது தேசம் விளையாட்டு மற்றும் கலைகள் நிறைந்த தேசமாக இருந்தது. விவசாயத்தில் நாற்று நடுவது முதல் அறுவடை செய்யும் வரை ஆடல், பாடல் உடன் அதனைக் கொண்டாடி வந்தனர். ஆண்டில் 365 நாட்களும் பண்டிகை யைக் கொண்டாடி வந்தோம். இது தற்போது அழியத் தொடங்கி விட்டன. இதில், கிராமப்புறங்களில் அழிந்து வரும் கலைகளையாவது நாம் மீட்க வேண்டும் என்றார்.

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு

அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “காஷ்மீர் பிரச்சினையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. காஷ்மீர் பகுதி மட்டுமின்றி லடாக் மற்றும் ஜம்மு பகுதியைச் சேர்ந்தவர்களையும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு குறித்து கேட்டபோது, ‘‘அவர் சிறந்த வீரர். நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற சிறந்த வீரர்களை நாம் உருவாக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT