தமிழகம்

பிஆர்பி விடுதலைக்கு எதிரான ஆட்சியரின் மேல் முறையீடு விசாரணைக்கு ஏற்பு

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டவிரோ தமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமை யாக்கக் கோரி மதுரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோர் மீதான 2 வழக் குகளும், குவாரி அதிபர் ராம.சகாதேவன் மீதான ஒரு வழக்கும் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி முன்பு 29.3.2016-ல் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

நடுவர் தனது உத்தரவில், இந்த வழக்குகளை 2013-ல் தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல்மிஸ்ரா, அப்போது மாவட்ட ஆட்சியராக இல்லை என்றும் இதனால் அன்சுல் மிஸ்ரா மீதும், அவருக்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவு தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத் துக்கு மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் 2 மேல் முறையீட்டு மனுக்கள் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டன. மேல் முறை யீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விவாதம் நடைபெற்றது.

நீதிபதி பிறப்பித்த உத்தர வில், “தனி நபர் வழக்குகளில் கீழமை நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்மு றையீடு செய்யலாம் என உயர் நீதிமன்ற முழு அமர்வும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்த ரவிட்டுள்ளது. இந்த வழக்குகளை மதுரை மாவட்ட ஆட்சியர் தனி நபர் வழக்காகவே மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால் அந்த வழக்கில் மேலூர் நடுவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்மு றையீட்டு மனு தாக்கல் செய்ய லாம். இதனால் 2 மேல்முறையீட்டு மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்படுகின்றன. இதனால் பதி வுத்துறை 2 மேல் முறையீட்டு மனுக்களுக்கும் வழக்கு எண் வழங்கி, ஜூலை 26-ல் விசார ணைக்கு பட்டியலிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT