இலங்கை சிறையில் இருந்து விடு தலை செய்யப்பட்ட தமிழக மீனவர் கள் 38 பேர் நேற்று தாயகம் திரும்பி னர்.
கடந்த மார்ச் மாதம் தங்கச்சி மடம், ஜெகதாப்பட்டினம், கோட் டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மீனவர்கள் யாழ்ப்பாணம், வவு னியா சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக 38 மீனவர்களும் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், கோட்டைப்பட்டி னத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் என 38 பேரும் இலங்கை கடற் படையினரால் நேற்று காலை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ‘ஆயுஷ்’ கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.
அங்கு இந்திய கடலோரக் காவல் படையின் காரைக்கால் மைய கமாண்டர் எஸ்.என்.எம்.பட்நாயக் மீனவர்களை நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமியிடம் ஒப்ப டைத்தார். தொடர்ந்து, மீனவர் களுக்கு உடைகள் உள்ளிட்ட உத விப் பொருட்களை ஆட்சியர் வழங்கி னார். மீன்வளத் துறை இணை இயக் குநர் அமல் சேவியர் உடனிருந்தார்.