தமிழகம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தை பொருத்தவரை வெப்பசலனம் காரணமாக சில தினங்களுக்கு, ஓரிரு இடங்களில் மழை நீடிக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்கும்.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வால்பாறையில் 15 மி.மீ, வேலூரில் 8.1 மி.மீ, சென்னையில் 6.4 மி.மீ, கன்னியாகுமரியில் 5.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT