காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். நடுவர் மன்றங்களைக் கலைத்துவிட்டு, ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டு வதைத் தடுக்க வேண்டும். தமிழக அரசு கோரிய வறட்சி நிவார ணத்தை மத்திய அரசு முழுமை யாக வழங்க வேண்டும். டெல் டாவில் மீத்தேன், பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுப்ப தற்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் போரமைப் புத் தலைவர் த.வெள்ளையன் தொடங்கிவைத்தார். தமிழக விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த.மணிமொழியன், தமிழ்த் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் அ.நல்லதுரை, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகி பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர் வாகிகள் பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸார் தரப்பில், பகலில் மட்டும் போராட்டத்தை நடத்துமாறும், இரவு வீட்டுக்கு சென்றுவிட்டு மறு நாள் வந்து போராட்டத்தைத் தொடருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த போராட்டக் குழுவினர், இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டத்தைப் போல, தஞ்சை யில் நேற்று தொடங்கிய விவ சாயிகளின் காவிரி உரிமைக்கான போராட்டத்திலும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.