தமிழகம்

தமிழகம் நோக்கி நகர்கிறது மாதி புயல்: ரமணன்

செய்திப்பிரிவு

'மாதி' புயல் தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்: 'மாதி' புயல், சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள், என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT