தமிழகம்

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 7-ம் தேதி தொடக்கம்: தொமுச, சிஐடியு உட்பட 52 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் 7-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் நடக்கிறது. இதில் பங்கேற்க தொமுச, சிஐடியு உட்பட 52 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1.43 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப் பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே, 13-வது புதிய ஒப்பந்தத் துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே, தொழிற்சங்கங் களுடன் தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த 15 பேர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், 13-வது ஊதிய ஒப்பந்த முத் தரப்பு பேச்சுவார்த்தை வரும் 7-ம் தேதி குரோம்பேட்டை பணிமனையில் நடக்கவுள்ளது. இதில், பங் கேற்க மொத்தம் 52 தொழிற்சங்கங் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “13-வது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இருக்கும் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசுப் போக்கு வரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் இடைப்பட்ட தொகை யை தமிழக அரசு வழங்க வேண் டும் என்பன உட்பட 28 அம்ச கோரிக் கைகளை முன் வைப்போம். அதன் படி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அரசுப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் 13-வது ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திட அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, தொமுச உட்பட 50-க்கும் மேற்பட்ட சங்கங் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT