தமிழகம்

குரூப் - 4 பணியிடங்களுக்கு 2-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

குரூப்-4 பணியிடங்களுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

குரூப்-4-ல் அடங்கிய இள நிலை உதவியாளர், நிளஅளவர், வரைவாளர் பதவிகளை நேரடி யாக நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 21.12.2014 அன்று நடைபெற்றது. தேர்வுமுடிவுகள் 22.05.2015 அன்று வெளியிடப் பட்டன. முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள 419 பணியிடங்களை நிரப்பும் பொருட்டு 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 முதல் 12-ம் தேதி வரை சென்னையில் உள்ள டிஎன்பி எஸ்சி அலுவலகத்தில் நடைபெற வுள்ளது. இந்தக் கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப் பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற் காலிகப் பட்டியல் டிஎன்பி எஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கலந்தாய்வுக்கான அழைப் புக்கடிதம் விரைவு அஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், அவர் கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித் துள்ள தகவல்கள், தகுதியு டைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. கலந்தாய்வுக்கு வரத் தவறுவோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

SCROLL FOR NEXT