திண்டுக்கல்லில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை யும், தமிழக முதல்வர் குறித்தும் அவதூறாக பேசியதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2013-ம் ஆண் டில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறி ஞரும், மு.க.ஸ்டாலின் தரப்பிலும் மூத்த வழக்கறிஞரும் ஆஜராக இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என இரு தரப்பு வழக்கறிஞர்களும் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை செப். 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.